loader
இம்மாத இறுதிக்குள் 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம்! - சீன நிபுணர் எச்சரிக்கை!

இம்மாத இறுதிக்குள் 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம்! - சீன நிபுணர் எச்சரிக்கை!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதே வேகத்தில் கொரோனா வைரஸ் பரவினால், இம்மாத இறுதிக்குள், வூகானில் மட்டும் 5 லட்சம் பேர் கொரோனா நச்சுத் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று, சீன நோய்தொற்றியியல் நிபுணர் ஆதம் குச்சார்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வூகான் மாகாணத்தில் கொரானா தொற்று உச்சகட்டத்தை அடையும் போது, 20 பேரில் ஒருவருக்கு அதன் பாதிப்பு ஏற்படும் என அவர் கணக்கிட்டுள்ளார்.

எனினும் அதைத் தடுப்பதற்கான மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News