செர்டாங், பிப். 1-
கேப்டன் செல்வக்குமார் ஆதரவில், மாபெரும் பெனால்டி கிக் போட்டி செர்டாங்கில் நாளை நடைபெறவுள்ளது.
செர்டாங் இளையோர் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில், 3-வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டி, செர்டாங் மார்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 64 குழுக்கள் களமிறங்கவுள்ளன.
பெனாராஜு இன்சான் (PENARAJU INSAN) இயக்கத்தின் தலைவர் கேப்டன் செல்வக்குமார் ஆதரவில் இந்த பெனால்டி கிக் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையாக 7,500 வெள்ளியை கேப்டன் செல்வக்குமார் வழங்கியுள்ளதாக செர்டாங் இளையோர் சமூக நல இயக்கத்தின் தலைவர் கமல்நாத் முனியாண்டி கூறினார்.
இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் அணியினருக்கு 4,000 வெள்ளியும், வெற்றிக் கிண்ணமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2,000 வெள்ளியும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 1,000 வெள்ளியும், நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 500 வெள்ளியும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இளையோர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பெனால்டி கிக் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
இப்போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான குழுக்கள் பங்கேற்பதுதான் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும்,
அதே வேளையில் இப்போட்டியின் வாயிலாகக் கிடைக்கும் பணத்தில், செர்டாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கமல்நாத் முனியாண்டி கூறினார்.
இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும். இதன் அடிப்படையில் இப்போட்டிக்கு பெனாராஜு இன்சான் இயக்கம் முழு ஆதரவை வழங்கியுள்ளது.
வரும் காலங்களில் இளையோரை மேம்படுத்தும் திட்டங்களையும் மேற்கொள்ள சங்கம் இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைவர் கேப்டன் செல்வக்குமார் கூறினார்!
0 Comments