கோலாலம்பூர் ஜனவரி- 26
மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாரின் 68-வது பிறந்தநாள் விழா, இன்று உள்நாட்டுக் கலைஞர்கள் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அன்புள்ள கவிமாறன், வித்யா உணவகம் பாலு, சங்கமம் சுப்ரா, நடிகர் குமரேசன், பாஸ்கி உட்பட மேலும் பல உள்ளூர்க் கலைஞர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், ரத்னவள்ளி அம்மையாருக்குத் தெரியாமல் 'கலைஞர்களுடன் சந்திப்பு' என்ற சிறப்பு நிகழ்ச்சியை வழங்கி அம்மையாருக்கு இன்ப அதிரிச்சியைக் கொடுத்தனர் கலைஞர்கள்.
உள்நாட்டுக் கலைஞர்களுக்குப் பல சேவைகளை வழங்கி, பலரின் வாழ்விற்கு வெளிச்சமாய் இருப்பதோடு, கலைஞர்களால் கலைத்தாய் என்று செல்லமாய் அழைக்கப்படும் மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், அவரின் கணவருடன் கேக் வெட்டி உற்சாகமாய் இப்பிறந்த நாளைக் கொண்டாடினார்!
0 Comments