‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா என்பவர், 15 கேள்விகளுக்கும் சரியான விடையளித்து ‘கோடீஸ்வரி’ ஆகியுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். வாய் பேசமுடியாமல் காது கேட்காமல் இருந்து வருபவர். இந்தக் குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக ‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தற்போது 1 கோடி ரூபாய் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வரும் அவருக்கு கலக்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியமாம்!
0 Comments