ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார்? என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘அடுத்த ஓட்டு ரஜினிக்கே’ என்ற ‘ஹேஷ் டேக்’கை உருவாக்கி இந்திய அளவில் அதைப் பிரபலப்படுத்தினார்கள்.
தேர்தலில் வாக்களித்த ரஜினிகாந்த், மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று மும்பை சென்றார். மும்பை புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது ரசிகர்களின் ஆர்வம் தனக்குப் புரிகிறது என்றும், கண்டிப்பாக அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தாம் சந்திக்கத் தயாராக இருல்பதாக அவர் தெரிவித்தார். இதன ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வழக்கம்போல இது 'தர்பார்' புரோமஷனுக்கான வேலைதான் என்கின்றனர் ஒரு சிலர்!
0 Comments