loader
அந்தத் தலைவருக்கு தப்பா நாடாளுமன்றம் வேண்டுமா?

அந்தத் தலைவருக்கு தப்பா நாடாளுமன்றம் வேண்டுமா?

2008 -ல் இருந்து தாப்பா நாடாளுமன்றத்தை தக்க வைத்துள்ள டத்தோ ஸ்ரீ சரவணன், இப்போது  ம.இ.காவின் வெற்றிபெற்ற ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில்  கடந்த பொதுத்தேர்தலில்  ஜீரோ வோட் ம.இ.கா பிரச்சாரத்தை நடத்திய தலைவரும், இப்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளவருமான ஒருவர்  தாப்பா நாடாளுமன்றத்தைக் குறிவைத்துள்ளதாக ம.இ.கா  தலைமையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அவரின் கீழ் செயல்படும் அமைப்பு தாப்பாவில் மையமிட்டுள்ளதாகவும், ம.இ.கா தலைமையின் தகவல் கூறுகிறது. பூர்வக்குடி மக்களுக்குக் குரல் கொடுப்பதும், அந்த சீட்டுகாகத்தான் என்றும் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும்  முன்று ஆண்டுகள் உள்ள நிலையில், டத்தோ ஸ்ரீ சரவணனைத் தோற்கடிக்கும் நோக்கில் முழுமூச்சாக செயல்படுகிறாரா அந்தத் தலைவர்? என்பதுதான் இப்போதைய கேள்வியாய் இருக்கிறது. அரசியல் சுனாமியிலும் சரவணனுக்கு தோள் கொடுத்த தாப்பா நாடாளுமன்றத்தை அவ்வளவு எளிதில் பறித்துவிட முடியாது என்றும் சொல்லப்படுகிறது.  அந்தத் தலைவருக்குத் தாப்பா மக்கள் மீது பாசமா? அல்லது அந்த நாடாளுமன்ற உறுப்பினருடன் தீராப் பாகையா? காத்திருப்போம்!

(மக்களுடன் முகமுடி)

0 Comments

leave a reply

Recent News