யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் மூலம் நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலை மீண்டும் உயர்ந்துள்ளது தெரிகிறது.
நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 8A, 7A, 6A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த யூபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் 68.9%ஆக இருந்தது. இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 78.51%ஆக அதிகரித்துள்ளது. மலாய், சீனப்பள்ளிகளை ஒப்பிடுகையில் தமிழ்ப்பள்ளிகளின் அடைவு நிலையே சிறப்பாக உள்ளது. இது தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது சமுதாயத்திற்குப் பெருமையளிக்கும் விஷயமாகும்.
முடிவுகளின் முழு விவரத்தை விரைவில் ‘தமிழ் லென்ஸ்’ வழங்கும் – மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
0 Comments