loader
நமக்குத் தெரியாமலேயே நமது போனில் புகைப்படம் எடுக்க முடியும்! அதிர்ச்சி தகவல்!

நமக்குத் தெரியாமலேயே நமது போனில் புகைப்படம் எடுக்க முடியும்! அதிர்ச்சி தகவல்!

நமது  ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் எடுக்கப் பயன்படும் செயலிகளில் மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலும், பயனாளர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இதில், கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 எக்ஸ்.எல் மற்றும் பிக்சல் 3  ஸ்மார்ட்போன் செயலிகளும் விதிவிலக்கல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகைப்படச் செயலிகளின் இந்தக் குளறுபடி குறித்து எரிஸ் யாலன் என்கிற கூகுள் பாதுகாப்பு ஆய்வாளர் பாதுகாப்பு குறைபாடு குறித்து கூகுள் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 4-ஆம் தேதி யாலன் அளித்த புகாரை ஆகஸ்ட் 11-ஆம் தேதி கூகுள் நிறுவனம் ஏற்றுக்கொண்டதோடு பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்துள்ளது.

இதில் அதிகமாக சாம்சங் மொபைல்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் சில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிலும் இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் தங்கள் குழுவின் சந்தேகத்தை உறுதி செய்துள்ளதாகவும். இந்தப் பிரச்னை கூகுள் பிக்சல் போன்களில் மட்டுமல்லாமல், மற்ற  ஆண்ட்ராய்டு செயலிகளிலும் உள்ளதையும் கூகுள் உறுதி செய்துள்ளதாக யாலன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூகுள்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸை சரி செய்வதற்குத் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது, கூடிய விரைவில் இது சரி செய்யப்படும். ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவோர் கூகுளால் பரிசோதனை செய்யப்பட்ட செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் படி கூகுள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News