கோலாலம்பூர் நவம்பர்-20
நிதி அமைச்சு தேசிய வர்த்தக சம்மேளனம் (என்.சி.சி.ஐ.எம்), மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம் ஏற்பாட்டில், எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதி தலைநகர் மெட்ரேட் மண்டபத்தில், மாலை 5 மணி முதல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
நிதி அமைச்சர் லிம் குவான் எங் தலைமையில், என்.சி.சி.ஐ.எம் தலைவர் டான் ஸ்ரீ தெர் மற்றும் மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை அழைப்பதாக மைக்கியின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.
அரசாங்க வர்த்தக அமைப்பின் அதிகாரிகள், மாநில வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இந்தத் தீபாவளி நிகழ்வு, வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைய உள்ளது.
ஆகையால், புதிய வர்த்தகர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ள மைக்கி அழைப்பதாக டாக்டர் குமாரராஜா தெரிவித்தார்.
பல்வேறு சிறப்பு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தீபாவளி உபசரிப்பில், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேல் விவரங்களுக்கு
013-453 1761 என்ற எண்ணில் அழைக்கலாம்!
0 Comments