கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தோல்வியச் சந்திக்கும் என தாம் எதிர்பார்த்ததாகவும், ஆனால், இந்த அளவிற்கு தோற்கடிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய் மக்களின் முடிவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த மகாதீர், 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
இது குறித்து கூட்டணிக் கட்சியினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்களர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்!
0 Comments