கோலாலம்பூர் நவம்பர்- 16
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை பதவி விலகச் சொல்லி ஒரு தரப்பினர் அண்மையில் அழுத்தம் கொடுத்தனர். அவர்கள் தியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் பதவி விலகும் படி தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நான் பாதியில் விட்டுச் செல்லமாட்டேன் என பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
"மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனது மக்கள் சேவை எப்போதும் தொடரும். அடுத்த பொதுத்தேர்தலில் பத்து தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேனா, இல்லையா என்பதைப் பிறகு பார்ப்போம். ஆனால் இப்போது எனக்கு கடமை இருக்கு. பாதியில் செல்லமாட்டேன் எனப் பிரபாகரன் பதில் அடி கொடுத்தார்.
நேற்று இரவு ஜாலான் ஈப்போ பாப்பா ரீச் உணவகத்தில் ஒரு சந்திப்பிற்குச் சென்ற பிரபாகரன், தனது வாகன ஓட்டுனரை இல்லம் திரும்பச்சொல்விட்டு சந்திப்பில் ஈடுபட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வாகனத்தில் ஒரே முட்டைகள் வீசப்பட்டிருந்தன.
யாரோ பொறுப்பற்ற சிலர் இதைச் செய்துள்ளனர் என்பதை உணர்ந்த பிரபாகரன் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தியான் சுவா தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பு வந்த பிறகு, பத்து நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சிலர் மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் யார்? அடுத்தக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்யவிருக்கிறார் பிரபாகரன்?
0 Comments