loader
உலகத் தமிழர்கள் மத்தியில் வர்த்தக உறவை எழுமின் தி ரைஸ் மாநாடு அமைத்துள்ளது!

உலகத் தமிழர்கள் மத்தியில் வர்த்தக உறவை எழுமின் தி ரைஸ் மாநாடு அமைத்துள்ளது!

சென்னை நவ.15- 

உலகத் தமிழர்கள் மத்தியில் ஒரு வர்த்தக உறவை எழுமின் தி ரைஸ் மாநாடு அமைத்துள்ளதாக கிரீன் விஷன் ரிசோர்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ வி.எஸ். மோகன் கூறியுள்ளார்.

இந்த மூன்று நாள் மாநாடு மலேசிய வர்த்தகர்களுக்கு ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தத்தம் நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை மலேசிய வர்த்தகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் குறிப்பாக சீனா, இந்தியா, மியான்மார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன்வழி பல வர்த்தக வாய்ப்புகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக டத்தோ வி.எஸ். மோகன் தெரிவித்தார்.

உலக நாடுகளில் எத்தனையோ மாநாடுகள் நடத்தப்பட்டுள்ள வேளையில், எழுமின் தி ரைஸ் மாநாடு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. உலகத் தமிழர்களை வர்த்தகம் வழி ஒன்றிணைக்கும் ஒரு மாநாடு இதுவாகும்.

இதில் 35 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகத் தமிழர்கள் கலந்து கொண்டு உலக நாடுகளின் வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதற்கு வழி தேடிக் கொண்டுள்ளதாக  டத்தோ வி.எஸ்.மோகன் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News