loader
‘புலனாய்வு’ திரையில்...  பைரவி ஆட்டம்!  படத்தின் வசூலைக் கூட்டும்!

‘புலனாய்வு’ திரையில்... பைரவி ஆட்டம்! படத்தின் வசூலைக் கூட்டும்!

கோலாலம்பூர் நவம்பர் - 15

64 திரை அரங்கில் நேற்று  முதல் திரையிடப்பட்டுள்ள ‘புலனாய்வு’ திரைப்படம் முதல் நாளே மக்களைக் கவரத் தொடங்கிவிட்டது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கதையில் தொய்வு இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதோடு ஒவ்வொரு காட்சியும் அடுத்தக் கட்ட நகர்வின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் கருத்து அமைந்திருக்கிறது. அந்த வகையில் படத்தின் இயக்குனர்களான சதீஸ் நடராஜன், ஷாலினி பாலசுந்திரத்திற்குப் பாராட்டுகள். இனி வரும் காலங்களில் டத்தின் ஸ்ரீ ஷைலா நாயரை ‘பைரவி’ என்று  அழைக்கப்படுவார் போல. அந்த அளவிற்கு பைரவி கதாப்பாத்திரம் இப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளது. இசை படத்திற்கு உயிரோட்டம்.அதோடு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறந்த தரம் எனவும்  பேசப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அடுத்த மூன்று நாட்கள் இப்படத்தின் வெற்றி நகர்வைத் தீர்மானிக்கும். அந்த வகையில் அடுத்த முன்று நாட்கள்  64 திரை அரங்குகளில் இந்தப் பைரவியின் ஆட்டம்  இத்திரைப்படத்தின் வசூலைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் வெற்றிப்படமாக  அமையும் என ரசிகர்கள்  கருத்துக்களைக் கூறியுள்ளனர். மலேசியத் திரைப்படம் இப்படிப்பட்ட தரத்தில் வெளிவரவேண்டும் எனவும் மக்களின் கருத்து உள்ளது.

‘வெடிகுண்டு பசங்க’ வசூலை முறியடிக்குமா? ‘புலனாய்வு’ திரைப்படத்தின் வசூல்  பொறுத்திருந்து  பார்ப்போம்!

0 Comments

leave a reply

Recent News