கோலாலம்பூர் நவம்பர் - 8
மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முகமட் காலில் யாக்கோப் அவர்களின் 81-வது பிறந்த நாளை முன்னிட்டு, சுமார் 248 பேர் சிறப்புப் பட்டம் பெற்றனர்.
இதில், கோலாலம்பூர் புத்ரா ஜெயா இந்திய வர்த்தகர் சங்கத்தின் செயலவை உறுப்பினரும், ‘மெட்ராஸ் கஃபே’ மற்றும் ‘கீதாஸ் ஹவுஸ் ஆஃப் பாத்தே’ நிறுவனங்களின் இயக்குனருமான ராஜகுமார் தம்பிராஜா ‘டத்தோ’ பட்டம் பெற்றார்.
மலாக்கா ஆயர் குரோவில் உள்ள ஆளுநர் மாளிகையில், அண்மையில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில், ராஜகுமாரின் சகோதரரும், மைக்கியின் பொதுச்செயலாளருமான டத்தோ ஏ.டி குமாரராஜாவும் கலந்துகொண்டார்!
2 Comments
Arjhun from Trichy
Congrats Datto Mr.Rajkumar. God Bless you 🙏 and your family members with Good Health Wealth and Peace. Superb Sir. Sorry for the late wishes.
Rj.கார்த்திகேயன்
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை!!வாழ்க வளமுடன்!!