கோலாலம்பூர் நவம்பர்- 7
சமீபத்தில் சர்ச்சையாகப் பேசப்பட்ட 'புலனாய்வு' திரைப்படம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி மலேசியா முழுவதும் உள்ள 64 திரை அரங்குகளில் வெளியீடு காண்கிறது.
அந்த வகையில் சபா சரவாக்கிலும் இப்படம் வெளியீடு காண்கிறது. சபாவில் சண்டக்காண் லோட்டஸ் திரை அரங்கிலும், சரவாக்கில் எம்.எம்.சி ரிவர் சைட் திரை அரங்கிலும் வெளியீடு காண்கிறது.
ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகளை படத்தின் இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் காணொளிகள் வாயிலாகவும், பல பேட்டிகள் மூலமாகவும் எற்படுத்தி உள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் பிரபல பாடகியுமான டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர் இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் நடித்திருப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து
சதீஸ் புதிய இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தனா, ஷாலினி, ஷைலா நாயர் ஆகிய முன்று பெண்களிடம் மாட்டித் தவிக்கும் நாயகனாக கபில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
சதீஸ் இயக்கும் முதல் படம் 'புலனாய்வு'. இந்த ஆய்வை அவர் தன் மனைவியுடன் இணைந்து செய்துள்ளார். அதோடு தன் மனைவியையும் இப்படத்தில் அவர் இயக்கி உள்ளார்.
படத்தைத் திரையில் பார்த்து உள்ளூர்க் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்குவோம். நம்மை மகிழ்விக்கும் அளவிற்குப் படம் இருக்கும் என நம்புவோம்.
'புலனாய்வு' நமக்கு என்ன சொல்ல வருகிறது?
64 திரை அரங்குகளில் விடை உள்ளது!
0 Comments