loader
பாகிஸ்தானில் ரயிலில் தீப்பிடித்ததில் 73 பேர்  உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ரயிலில் தீப்பிடித்ததில் 73 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் தலைநகர் கராச்சியிலிருந்து லாகூர் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயிலுக்குள், சமையலுக்காகப் பயணிகள் பயன்படுத்திய எரிவாயுக் கலன்  திடீரென வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

எரிவாயுக் கலன் வெடித்ததில் குறைந்தது மூன்று ரயில் பெட்டிகள் தீப்பற்றின.  வேகமாகச் சென்றுகொண்டிருந்த அந்த ரயிலிலிருந்து பலர் குதித்து மாண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளன.
மேலும் பலர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது!

0 Comments

leave a reply

Recent News