loader
புலனாய்வு திரைப்படக் குழுவினரை  வறுத்தெடுத்த நபர் 'வாட்ஸ் அனல் பறக்குது'!

புலனாய்வு திரைப்படக் குழுவினரை வறுத்தெடுத்த நபர் 'வாட்ஸ் அனல் பறக்குது'!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் அக்டோபர் - 30

மலேசியத் திரைப்படமான 'புலனாய்வு' திரைப்படம் எதிர்வரும் நவம்பர் - 14-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. தற்போது இத்திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார் ஒரு நண்பர். புலனாய்வு திரைப்படத்தின் திரையரங்கு போஸ்டரில் தமிழ் இல்லை என்பது அவருடைய ஆதங்கம். நியாயமான ஆதங்கம்தான். ஆனால், அவர் விமர்சித்த விதம்,  உபயோகித்த வார்த்தை தவறாக இருக்கிறது.

 'புலனாய்வு' திரைப்படத்தையும் அதன் படக்குழுவினரையும் ஆய்வு  செய்த பின் அவர் அப்பதிவை செய்திருக்கலாம் நாகரிகமாக. அவருடைய அந்தப் பதிவில் யார் என்று தெரியாத  முகங்கள் இப்படத்தில் நடிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாடே இந்திய சினிமா பாடலை இங்குப் பாடிக்கொண்டிருந்த காலத்தில், ஒரு மென்மையான பெண் குரல் சொந்தத் தமிழ் பாடலுடன்  மலேசியா ரசிகர்களைக் கவர்ந்தது. அவர்தான் ஷைலா நாயர். அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். முக்கிய போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

முட்டி மோதி தத்தளிக்கும்  மலேசியத் திரை உலகில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . லிம் கோக் வீங் பல்கலைக்கழகத்தில் திரை சார்ந்த  படிப்பை முடித்து, இடை இடையே போட்டோ கிராப்பியும் செய்து, படிப்பிற்காக ஒரு குறும்படம் எடுத்து, அதுவும் 'இணை' என்று தமிழ்ப் பெயரில்  எடுத்தவர் இப்படத்தின் இயக்குனர் ஷாலினி பாலசுந்திரம். 

அதன் பின் கீதையின் ராதை, திருடாதே பாப்பா திருடாதே, ரயில் பயணங்கள் , இப்போது புலனாய்வு என்று மலாய் ஆங்கில கலவை இல்லாமல் சுத்த தமிழில் தலைப்பு வைக்கும் ஓர் இயக்குனர்.

அஸ்ட்ரோ விழுதுகளில் தினம்தோறும் தமிழில் உரையாடி, தமிழ் நிகழ்ச்சியின் வழி  பல பிரமுகர்களை நேர்காணல் செய்யும் கபிலனின் தமிழை, காலை 9.30 மணிக்கு விழுதுகள் நிகழ்ச்சியில் பார்க்கலாம் அவர்தான் இப்படத்தின் நாயகன்.

1000  தமிழ்க் கவிதைகள், திரைபாடல்களை எழுதியுள்ள கவி நாயகன் யுவாஜியும, தமிழ் திரைக் கதை வசனகர்த்தாவான தாசனும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள் 

புது புது மெட்டுகளுடன் பல இனிமையான தமிழ்ப் பாடல்களை வழங்கி, மலேசியப் பாடல்களைத் தமிழ் திரை உலக இசை தரத்தில் வழங்கும் சில இசை அமைப்பாளர்களில், ராகவேந்திராவும் ஒருவர். அவர்தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.

இப்படித் தமிழ்ப் பற்று உள்ளவர்கள்தான் புலனாய்வு படக்குழுவினர் . 

பல தமிழ்த் திரைப்படங்கள்  ஆங்கில தலைப்புடன் தமிழில் எழுத பட்டிருக்கும். உதாரணதிற்கு 'சிக்சர்', 'மான்ஸ்டர்'  ஏன் தலைவர் நடித்த 'ரோபோ' இவை எல்லாம் தமிழ் தலைப்பு கிடையாது. எழுத்து மட்டும்தான் தமிழ். புலனாய்வு தமிழ் தலைப்பு அதற்குப் பாராட்டுவோம்.

அந்தப் படக்குழுவினர் ஆரம்பத்தில் இருந்து தமிழில் தான் பல விளமபரங்கள் செய்துள்ளனர். அது அந்த நண்பருக்குத் தெரிவியவில்லை அவரும் ஆய்வு செய்யவில்லை. அதனால் கோபப்பட்டுவிட்டார். கோபம் மனித இயல்பு.

ஆனால் அந்தக் கோபம் பலரது உழைப்பைச் சிதறடிக்கக் கூடாது. இங்கு நடப்பது எல்லாம் நன்மைக்கே. இங்கு ஒரு விஷயத்தை  நல்லவிதமாகச் சொன்னால், அது மக்களுக்குச் சேருவதற்குச் சற்று நேரம் எடுக்கும். ஆனால், நெகடிவ் விஷயம் உடேன வைரல் ஆகும் நண்பரின் பதிவு போல். அந்த நண்பர் புலனாய்வு திரைப்படத்திற்கு நன்மையே  செய்துள்ளார் படத்தின் தலைப்பை விமர்சித்து விளம்பரப்படுத்தி உள்ளார்.

புலனாய்வு திரைப்படத்தின் குழு தமிழ் பற்றுள்ள குழு. அவர்களுடைய போஸ்டர், இசை வெளியீடு டீசர்- டிரைலரில் தமிழ் இருக்கிறது.

இப்போது திரை அரங்கிலும் தமிழ் தவழும்.

அன்போடு சொல்லுங்கள், உரிமையோடு சொல்லுங்கள், சற்று பணிவு நாகரிகத்தோடு  சொல்லுங்கள் எல்லாம் சாத்தியமே!

1 Comments

  • Kirtigaiselvi
    2019-10-30 06:34:50

    Nice movie

leave a reply

Recent News