loader
நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸ் பாதுகாப்பு!

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸ் பாதுகாப்பு!

நடிகா் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் உள்ள காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு கடந்த சனிக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், நடிகா் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.
இதைக் கேட்ட காவலா்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். காவல்துறை உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில், சென்னை சாலிகிராமம் எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள நடிகா் விஜயின் தந்தை சந்திரசேகா் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூரில் உள்ள விஜய் பங்களாவுக்கு ஒரு காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, அந்த பங்களாவை போலீஸாா் சோதனையும் செய்தனா்.
சைபா் குற்றப்பிரிவு விசாரணை: வெடிகுண்டு மிரட்டல் குறித்து உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இதில் அந்த அழைப்பு வந்த செல்லிடப்பேசியில் பேசிய நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அந்த நபா், சென்னை போரூா் அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சோந்த ஒரு இளைஞா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனா். இதில் அந்த இளைஞா், முன்னுக்குப் பின் முரணான பதில்களை தெரிவித்து வருவதால், போலீஸாரிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்!

0 Comments

leave a reply

Recent News