loader
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை  அழுகிய நிலையில் மீட்பு...  தோல்வியில் முடிந்தது 80 மணி நேர போராட்டம்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை அழுகிய நிலையில் மீட்பு... தோல்வியில் முடிந்தது 80 மணி நேர போராட்டம்!

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி எடுத்து வந்தது.

சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பேராலயங்கள் பள்ளிவாசல்கள், கோயில்களில் சிறப்புத் தொழுகைகள், பிரார்த்தனைகள், பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில்,  80 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்புப் பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன.

சுஜித் உயிரிழந்தது உறுதியானது. குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது. நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.

இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சுஜித்தின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் தமிழகம் சோகத்தில் முழ்கியது!

 

 

 



 

 

 

 

0 Comments

leave a reply

Recent News