loader
கார்னிவெலில்  அந்நிய வியாபாரிகள்!    யார் தட்டிக் கேட்பது?  - உள்நாட்டு வியாபாரிகள் கொதிப்பு

கார்னிவெலில் அந்நிய வியாபாரிகள்! யார் தட்டிக் கேட்பது? - உள்நாட்டு வியாபாரிகள் கொதிப்பு

(வெற்றி விக்டர்- மகேன்)

 

கோலாலம்பூர் அக்டோபர்-23

நாட்டில் நடக்கும் சில கார்னிவெல்களில்  சுற்றுலா விசாவுடனும், புரொபெஷனல் விசிட் பாஸ்சுடனும் அந்நியத் தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வருவதாக  உள்நாட்டு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று மைக்கி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மைக்கி செயலாளர் டத்தோ  டாக்டர் ஏ.டி. குமாரராஜா, பிரிமாஸ் தலைவர் முத்துசாமி, மீதா செயலாளார் டத்தின் மகேஸ்வரி மற்றும் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர்  தற்போது புக்கிட் ஜாலிலில் நடக்கும் தீபாவளி கார்னிவெலில் அதிகமான அந்நிய வியாபாரிகள் வியாபாரம் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

உள்நாட்டு வியாபாரிகளை ஊக்குவிக்கவேண்டும் என மேடைக்கு மேடை பேசும் கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தகர் சங்கம் இந்த கார்னிவெலை ஆதரித்திருப்பது வருத்தமாக உள்ளது என பல வருடமாக அச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் முத்துசாமி, டத்தின் மகேஸ்வரி மற்றும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விளக்கம் கேட்டு அச்சங்கத்தின் தலைவருக்கு 

குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் வரவில்லை என முத்துசாமி மற்றும் டத்தின் மகேஸ்வரி தெரிவித்தனர்.  

அந்நிய வியாபாரிகளை ஊக்குவிப்பதுதான் அவர்களின் நோக்கமா? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே ஒரு முறை புகார் கொடுத்து மிட்வெலியில் நடந்த கார்னிவெலில்  அதிகாரிகள் சோதனையிட்டு சிலரைக் கைது செய்தனார். அதன் பின் இப்படிப்பட்ட கார்னிவெல் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன? பிரதமர், உள்துறை அமைச்சர், உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் அமைச்சர் என  அனைவரிடமும் மகஜர் வழங்கியுள்ளோம்.

இருப்பினும் இன்னமும் தைரியமாக வெறோரு யுக்தியைப் பயன்படுத்தி அந்நிய வியாபாரிகளுக்கு வாய்ப்புக். கொடுத்துள்ளனர் இதை யார்தான் தட்டிக் கேட்பது என டத்தின் மகேஸ்வரி  தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எங்கள் பிரச்னை புரியவில்லையா?  அங்கு வியாபரம் செய்யும் அந்நிய வியாபாரிகள் முறையான நிறுவனப் பதிவு வைத்துள்ளனரா? வரி கட்டுகிறார்களா?  முறையான வழியில் வந்து இங்கு வியாபாரம் செய்கிறார்களா?என்பதை அரசாங்கமும் அதிகாரிகளும் கண்டறிய வேண்டும். அதற்கு அதிரடிச் சோதனையை நடத்த வேண்டும் என டத்தின் மகேஸ்வரி, முத்துசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்!

1 Comments

  • ravinallan
    2019-10-23 05:13:43

    This can be easily done by giving a slap on organizer and his team. Kick on their buts with boots. This organizer should be rascal. This idiot needs only money . Filed a case against this rascal.

leave a reply

Recent News