loader
கடலில் தொலைந்துவிட்டேன்....  - மோடி!

கடலில் தொலைந்துவிட்டேன்.... - மோடி!

சீன அதிபர் ஜின்பிங்குடனான முறைசாரா உச்சி மாநாட்டு சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனையடுத்து இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங்கை மாமல்லபுரத்தில் சந்தித்தார்.

அப்போது, மாமல்லபுரம் கடற்கரையில், கடல் அலைகளில் கால்களை நனைத்தவாறே நடைப்பயிற்சி மேற்கொண்டார் மோடி.

 

அந்தத் தனது அனுபவங்களை ப இந்தி மொழியில் நேற்று கவிதை ஆக்கி உள்ளார்.

 

இதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதுபற்றிய முன்னுரையில்,“  மாமல்லபுரத்தில் கடலில் நடந்து நான், கடலில் தொலைந்து போனேன். இந்த உரையாடல் என் ஆத்ம உலகம். இதை உங்களோடு வார்த்தைகளில் பகிர்ந்து கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

8 பத்திகளில் எழுதி, அவரால் கையெழுத்திடப்பட்ட இந்தக் கவிதையில், சூரியனுடனும், அலைகளுடனுமான கடலின் உறவையும், அதன் வலியையும் உணர்வுப்பூர்வமாக விவரித்துள்ளார்.

மோடி ஏற்கனவே ‘ஒரு பயணம்’ கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News