நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் காளியம்மாளுக்குப் பெருகி வரும் ஆதரவால்... பலரும் வாயடைத்து நிற்கின்றனர்.
வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெளிப்படையாகவே காளியம்மாளை ஆதரித்துப் பதிவுகள் இடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதரவை, தங்கள் வாக்கு யாருக்கு என்கிற நிலைப்பாட்டை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர் மக்கள்.
இதில் நாம் தமிழர் கட்சி வட சென்னை வேட்பாளர் காளியம்மாளுக்கு வாக்களியுங்கள் என தமிழ் ஆய்வாளர் ஒரிசா பாலுவும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெருகும் ஆதரவால் காளியம்மாள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
மீனவ இனத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்தின் பட்டதாரியான அவர் பேச்சு, பிரச்சார மேடைகளில் யதார்த்தம் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments