கோலாலம்பூர் : 2020 பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என, மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (MIER) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி என்பது அனைத்து தரப்புக்கும் ஏற்புடையது என்று வர்ணித்த MIER தலைவர் டான் ஸ்ரீ கமல் சாலி, ஜிஎஸ்டி என்பது 2015 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 36 அமெரிக்க டாலருக்கும் குறைந்தபோது அரசாங்கத்தைத் தற்காக்க வைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி ஒரு நியாயமான திட்டம்தானே தவிர, சிலர் சொல்வதுபோல் இது பிற்போக்குத்தனமானது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் B40 பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், அதற்கான விலக்கு மற்றும் விதிமுறைகள் உள்ளதாகவும் கமல் சாலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஜிஎஸ்டியை நீக்கிவிட்டு எஸ்எஸ்டி-யைக் கொண்டுவந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொருளாதார வல்லுனர்களில் கமல் சாலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments