loader
ஒசாமா பின்லேடனின் மகன் சுட்டுக் கொலை!

ஒசாமா பின்லேடனின் மகன் சுட்டுக் கொலை!

ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பழி தீர்க்கும் விதமாக பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் பல லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து சுட்டுக் கொன்றன. இதன் பின்னர் அல்கொய்தா இயக்கத்திற்கு பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் தலைமை பொறுப்பை ஏற்றார்.

இதனால், அவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.  இந்நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியானது.  

இது பற்றி இதுவரையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளிவராத நிலையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் ஓசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் 3-ஆவது மனைவிக்குப் பிறந்த ஹம்ஸா பின்லேடன், அவரது 20 குழந்தைகளில் 15 ஆவதாகப் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News