loader
பிக் பாஸ் 3  இன்று கூடுகிறது நாய் பஞ்சாயத்து !

பிக் பாஸ் 3 இன்று கூடுகிறது நாய் பஞ்சாயத்து !

 

பிக் பாஸ் 3 சீசனில் ஏற்கனவே வெளியில் போன மூவர்  உள்ளே நுழைந்ததில், எதிர்பார்ப்பு இன்னும் கூடி இருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு மத்தியில் சர்ச்சைகளுக்கும் களேபரத்துக்கும் பஞ்சமே இல்லை.
வனிதா ஒருபக்கம் எகிற, லாஸ்லியா ஒருபக்கம் திமிர, இவர்களுக்கு மத்தியில் சாக்‌ஷி செரினை மூட்டி விடும் அங்கமும் அரங்கேறியது.
ஆனால் சாக்‌ஷி கொஞ்சம் ஓவராய் போய் பொதுமக்களை நாய்கள் என்று பேசியது பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது.
வலைத்தளங்களிலும் சாக்‌ஷியை வறுத்தெடுக்கத்  தொடங்கிவிட்டனர் வலைத்தள வாசிகள்.
இந்நிலையில் இது குறித்து கமல்ஹாசன் என்ன பேசப்போகிறார்? பஞ்சாயத்து கூடுமா? என்று நேற்று கேட்டிருந்தோம்.
அவ்வகையில் தற்போது வெளியான புரோமோவில் அது குறித்த கேள்வியை கமல்ஹாசன் கேட்பது போல் இருக்கிறது.
எனவே இந்த நாய் பஞ்சாயத்து இன்று கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News