'தர்பார்' பட வேலைகளில் தற்போது ரஜினி பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையுல் ரஜினி எப்போது முழு நேர அரசியலில் இறங்குவார் என பல்வேறு தரப்பினர்ய்ம் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அவரின் ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். ஆனால், ரஜினி இதுநாள் வரைக்கும் வழக்கம்போலவே குழப்ப நிலையில்தான் இருந்து வருகிறார்.
கமல்ஹாசன் கட்சி தொடங்கியதோடு, தேர்தலில் போட்டியிட்டு, தமது பலத்தைக் காட்டிவிட்டார்.
ஆனால் பல ஆண்டுகளாய் கோடி காட்டி வந்தாலும், இன்னும் மௌன சாமியாராகவே தொடர்கிறார் ரஜினி.
இந்நிலையில் தமிழக பிஜேபி தலைமை பதவி ரஜினிக்குத் தேடி வந்ததாகவும், அதையும் அவர் கிடப்பில் போட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.
இன்னொரு புறம் தர்பார் படத்திற்குப் பிறகு நிச்சயம் அரசியலில் குதிப்பார் எனவும் தகவல்கள் சொல்கின்றன!
0 Comments