தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியில் ஒளியேற்றி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றிகரமாக மூன்றாவது சீசனிலும் பரபரப்பைக் காட்டி வருகிறது.
இந்நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த போதிலும், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன் களிலும் கமல்தான் அதிகாரபூர்வ அறிவிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
பிக் பாஸின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிக்பாஸ் நான்காவது சீசனும் தொடங்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால் அந்த சீசனில் கமல் அறிவிப்பாளராக இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது.
பல்வேறு சர்ச்சைகள் காரணமாகவும் சட்டமன்ற தேர்தல் காலம் என்பதாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நான்காவது சீசனை சிம்பு தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருப்பதோடு, கமல் அளவுக்கு சிம்புவுடன் பக்குவமாகப் பேச முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் இச்செய்தி பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது!
0 Comments