loader
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து!

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

தற்போது சுவிட்சர்லாந்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 2017, 18 களில் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியும் வெற்றிபெறவில்லை. மூன்றாவது முறையாக இந்த ஆண்டும், அரையிறுதியில் சீனாவின் சென் யூவுடன் மோதிய சிந்து, 21-7, 21-14 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதனையடுத்து, ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து.

இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் பி.வி. சிந்து.

2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய  பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
சிந்துவின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News