காஷ்மீர் மாநிலத்தில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்திருக்கிறது. இதற்கு, தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சினிமா நட்சத்திரங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, நேற்று சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வரவேற்று பேசியதோடு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை பாராட்டியும் பேசினார்.
இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் விஜய் சேதுபதி, ”நிச்சயமா இது ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார். அவங்கவங்க பிரச்சினைகளுக்கு அவங்கவங்க தான் தீர்வு காண முடியும். உங்கள் வீட்டின் மீது நான் அக்கறை செலுத்தலாம், ஆனால் ஆளுமை செலுத்த முடியாது, கூடாது.” என்று தெரிவித்திருக்கிறார்!
0 Comments