loader
டான்ஸ்ரீ சுப்ரமணியத்தின் சேவை காலத்தால் அழியாதது! - டத்தோஸ்ரீ எம்.சரவணன்

டான்ஸ்ரீ சுப்ரமணியத்தின் சேவை காலத்தால் அழியாதது! - டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கோலாலம்பூர், ஜூலை 5:டான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

ம.இ.காவின் முன்னாள் தேசியத் துணைத்தலைவர், முன்னாள் துணையமைச்சர், நேசா கூட்டுறவுக்கழக தோற்றுனர் பெருமதிப்பிற்குரிய டான்ஸ்ரீ டத்தோ சி. சுப்ரமணியம் அவர்களின் மறைவை நினைத்து வருந்துகிறேன்.

கட்சிக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவை காலத்தால் அழியாதது.

அன்னாரின் மறைவில் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு,
அன்னாரின் ஆத்மா இறைவனிடத்தில் இளைப்பாற பிரார்த்திக்கின்றேன் என
டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News