loader
ம.இ.காவின் முதுபெரும் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் காலமானார்!

ம.இ.காவின் முதுபெரும் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் காலமானார்!

 

கோலாலம்பூர், ஜூலை 5: மஇகா முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் இன்று தமது 78 வது வயதில் காலமானார்.

இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) இரவு 8 மணியளவில் சுப்பிரமணியம் அவர்கள் மறைந்துவிட்டதாக அவரின் மகன் சுந்தர் உறுதிப்படுத்தினார்.

பல வருடங்களாக உடல் நலிவுற்றிருந்த அவர், தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக சுந்தர் கூறினார்.

அவர் 1974 முதல் 1982 வரை டாமன்சாரா எம்.பி.யாகவும், நான்கு முறை சிகாமட் எம்.பியாகவும் பணியாற்றினார்.

மஇகா துணைத் தலைவராகவும், பாரிசான் நேசனல் கூட்டணியில் துணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில் அன்னாரது இறுதிச் சடங்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள செக்‌ஷன் 16ல் உள்ள அவரின்  இல்லத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திப்பதோடு, அன்னாரது குடும்பத்தினருக்கு தமிழ் லென்ஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

0 Comments

leave a reply

Recent News