கோலாலம்பூர், ஜூலை 5: பாலிங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் பல நிவாரண மையங்களுக்கு (பிபிஎஸ்) வெளியேற்றப்பட்டனர், 80க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக மாண்டனர். இதில் ஒரு சிறுவன், உட்பட கர்ப்பிணிப்பெண்ணும் உயிரிழந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் அவர்களின் வீட்டை வெள்ளம் சூழ்ந்த நிலையில், மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சகதியில் சிக்கிக் கிடந்த அவர்களின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர்!
0 Comments