பாசிர் சலாக், ஜூலை 3: வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார்.
இந்த முக்கியமான பிரச்சினை மக்களைப் பாதித்து வருவதால் அதற்குத் தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் பிரதமர்.
மளிகைப் பொருட்களின் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதில் சுமார் 40 முதல் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) டத்தோ சாகூரில் நடந்த ஜெலாஜா அஸ்பிராசி கெலுவார்கா மலேசியா சுற்றுப்பயண நிறைவு உரையில் இதனைத் தெரிவித்தார்.
சிக்கன் மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பல பொருட்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கி வருகிறது.
நாங்கள் இன்னும் பொருட்களுக்கு மானியம் வழங்குகிறோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பாட்டில் சமையல் எண்ணெய்க்கான மானியம் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதுஎன்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
கோழிஒரு கிலோவிற்கு RM9.40 ஆக இருப்பதை உறுதி செய்வதற்காக, கோழிக்கு மானியம் வழங்க RM700 மில்லியனை ஒதுக்கியுள்ளோம்,என்று அவர் மேலும் கூறினார்.
தற்போதைய தண்ணீர் மற்றும் மின்சார கட்டண விகிதம் பராமரிக்கப்படும் என்றும், எரிபொருள் மற்றும் பிற செலவுகளில் நாடு கடுமையான அதிகரிப்பை எதிர்கொள்வதால், RM5.8 பில்லியன் மதிப்புள்ள மானியங்கள் அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி முன்னதாக அறிவித்திருந்தார்.
0 Comments