பெட்டாலிங் ஜெயா, ஜூலை 3: மலாய் மொழியை விட ஆங்கிலத்தை விரும்பும் மலேசியர்கள் காலனித்துவ மனநிலையில் சிக்கியுள்ளனர் என்று பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.
இவர்கள் காலனித்துவ காலத்தின் நிழலில் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பவர்கள், அல்லது பஹாசா மலேசியாவைக் கைவிட வேண்டும் என்று வற்புறுத்துவதில் வெறி கொண்டவர்கள்"ல் என்று அவர் கூறினார்.
பஹாசா மலேசியா மொழியை தொடர்ந்து இழிவுபடுத்தும் மலேசியர்களையும் ஹாடி அவாங் விமர்சித்தார்.
முன்னர் அவர்களை அடிமைப்படுத்தியவர்களிடம் அவர்களின் ஆன்மா இன்னும் சிக்கியுள்ளது என்று கூறினார்.
கடைகள் மற்றும் சந்தைகளில் உள்ள விளம்பரங்கள், நகரங்கள் மற்றும் சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளன, இருப்பினும் பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர்கூறினார்.
0 Comments