(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர், ஜூன் -7
தமிழ் சினிமாவின் வித்தியாசம் நிறைந்த படைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ் ரசிகர்களின் தாகத்தை தணிக்க உலக நாயகனால் மட்டும்தான் முடியும் என்பதை, 4 வருட இடைவேளைக்குப் பிறகு ரசிகர்களுக்கு நிரூபித்துள்ளார் நம்மவர் கமல்.
தமிழ் சினிமாவை ஆளும் ஆண்டவரே... என்ற முழுக்கத்துடன் உலக நாயகன் கமல் ஹாசனை வருக வருக என என ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க இப்போது வித்திட்டவர், உலக நாயகனின் தீவிர ரசிகன் இயக்குனர் லோகேஸ் கனகராஜ்.
மிக பெரிய ஒரு பார்வை இயக்குனர் லோகேஸ் மீது தற்போது விழுந்துள்ள நிலையில், அவரின் அடுத்த படம் எது? கைதி 2- வா? அல்லது விக்ரம் 3 -யா? என்ற பொறுப்பை விக்ரம் 2 படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்குக் கொடுத்துவிட்டார்கள். அதனால் மிக விரைவில் அதற்கான திரைக்கதையை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு ரசிகர்களால் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் பின்னடைவில் இருந்து மீட்டு, மீண்டும் சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கும் விக்ரம் 2 வாயிலாக, உலக நாயகன் களத்தில் குதிக்கிறார் என்பது போல், படத்தின் பாடல் ‘நாயகன் மீண்டும் வர எட்டுத்திக்கும் பயம்தானே’….
ஆரம்பிக்கலாமா! என உலக நாயகன் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகமூட்டி இன்று அனைத்து சமூக உடகங்களிலும் கமல் kluster பரவத் தொடங்கிவிட்டது.
உலக மெங்கும் விக்ரம்...விக்ரம் ...விக்ரம் தான்.
படத்தில் நடித்திருக்கும் பஹத் பாசல், விஜய் சேதுபதி தொடங்கி ஏஜெண்ட் தினா குழந்தை விக்ரம் வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்று, அனைவரையும் பேட்டி எடுக்க ஊடகங்கள் முண்டி அடிக்கும் நிலையில் அனைவரும் தங்கள் படைப்பை விதைத்துள்ளனர்.
படத்தில் அன்பறிவின் சண்டை காட்சி அமைப்புகள் ரசிகர்களைக் கட்டிபோட்டுவிட்டது. அனிருத்தின் இசை படத்தின் உயிரோட்டம். ஒளிப்பதிவு மிரட்டவைக்கிறது.
அதோடு நடிப்பின் நாயகன் சூர்யா 2 நிமிடக் காட்சியில் விக்ரம் 3 க்கு ஓர் உயிரோட்டம் கொடுத்து, இப்போதே ரசிகர்களை விக்ரம் 3 க்கு தயாராகுங்கள் என அடுத்த விருந்துக்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டார்.
நீண்டநாள் கழித்து வெள்ளித் திரையில் ரசிகர்களைச் சந்தித்த உலக நாயகன் kluster கமல் தாக்கத்தை ரசிகர்களிடம் பரப்பிவிட்டார்.
0 Comments