கோலாலம்பூர், ஜனவரி 25:
காரை திருடுவதற்கு முற்பட்ட கார் கொள்ளையன் ஈஹைலிங் டிரைவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதை அடுத்து கைது செய்யப்பட்டான்
நேற்று திங்கள்கிழமை, கார் திருட்டு நடந்ததாக செந்தூல் OCPD உதவி ஆணையர் பே எங் லாய் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநர் அந்தச் சந்தேக நபரை புத்ராஜெயாவிற்கு அழைத்துச் சென்ற போது, செந்துல் அருகே வந்தபோது, ஆன்லைன் வங்கி மூலம் சவாரிக்குப் பணம் செலுத்தச் சொல்லியிருக்கிறார் கார் ஓட்டுநர்.
இந்நிலையில் சந்தேக நபர் அவரது கழுத்தில் கூர்மையான பொருளால் குத்தியதாகவும்,
கார் திருடன் வாகனத்துடன் புறப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் காரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டதாகவும் பே எங் லய் கூறினார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்டவருக்கு உதவ பொதுமக்கள் விரைந்தனர். பின்னர் 47 வயதான ஈஹைலிங் டிரைவர் ஆம்புலன்ஸ் மூலம் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் கூறினார்.
இந்தத் தாக்குதல் கேமராவில் பதிவாகி, பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 23 வயதுடைய ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருடப்பட்ட கார் மற்றும் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஆகியவை கைது செய்யப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டன!
0 Comments