loader
ஸ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறத்தொடங்கியது!

ஸ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறத்தொடங்கியது!

ஷா ஆலாம், ஜனவரி - 24

இன்று பெய்த மழையில் ஸ்ரீ மூடா பகுதியில் மீண்டும் வெள்ளம் ஏறத்தொடங்கியதாக சமூக சேவகர்  உமா காந்தன் தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருந்து  ஃபேஸ்புக் நேரலை வாயிலாக அங்குள்ள நிலையை விவரித்த உமா காந்தன், தயவு செய்து  இந்த வெள்ளப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணுங்கள் என மாநில மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

இப்போது பெய்த அரைமணி நேர மழைக்கே இந்த நிலை. வானிலையைப் பார்த்தால் மழை மீண்டும் பெய்தால்  நிலைமை மோசமாகும் என உமா காந்தன் தெரிவித்தார்.

இங்குள்ள மக்கள் ஏற்கனவே நடந்த சம்பவத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இந்நிலையில் மிண்டும் ஒரு இடரைச் சந்திக்க அவர்களால் இயலாது. எனவே, வெள்ளப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணுங்கள் இல்லையேல் மழை பெய்யும் போதெல்லாம் மக்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பயந்து வாழவேண்டும் என அவர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News