ஸ்டெர்லைட் பாதிப்பால் மிகப்பெரும் சோகத்தைச் சந்தித்து இன்னும் மீளவில்லை மக்கள். ஆனால், அங்குத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. அங்கே போட்டியிடும் வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்கள் என்பதால், தேர்தலில் ஜெயிப்பதற்காகப் பல கோடிகளை இரைக்கக் காத்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
இதனிடடையே தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் ரூ.1 கோடியே 15 லட்சம் வரையிலான பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடடைபெற்ற சோதனையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
0 Comments