மலேசிய சிம்ரன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராஜி (37 வயது) காலமானார். மலாக்காவில் உள்ள தனது கணவரின் சகோதரர் இல்லத்திற்குச் சென்றிருந்த வேளையில், கடந்த 15-ஆம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் மொழி மட்டுமல்லாது, மலாய் மொழியிலும் தனது அபார நடிப்பாற்றலால் எண்ணற்ற உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ராஜி. தொலைக்காட்சி நாடகங்கள், படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கானாவுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை கலாட்டாக்கள், நம் அசல் மலேசியாவின் அக்மார்க் காமெடிகள்.
உடல் பருமனால் அவதியுற்றாலும், அதையே ஒரு மூலதனமாக வைத்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.
நடிக்காமல் சிறிது காலம் ஓய்வில் இருந்த அவர், அண்மையில்தான் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் அவரின் மரணம் மலேசியக் கலை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!
0 Comments