வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் பெரும்பாலும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாl, இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்த ஸ்டாலின், இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என தெரிவித்துள்ளார்!
0 Comments