நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், நேற்று மாலை வழக்கமான பரிசோதனைக்காகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளும் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனை சென்றிருப்பதாகவும், லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
மருத்துவ பரிசோதனை முடிந்து ஒருநாள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் ரஜினி தரப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது!
விளம்பரம்:
0 Comments