கோலாலம்பூர், அக்டோபர் 15 : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், தனது மகளைப் பார்க்க சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று, தனது பாஸ்போர்ட்டை தற்காலிகமாக திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். .
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) ரோஸ்மாவின் விண்ணப்பத்தை இன்று ஏற்றுக்கொண்டதோடு, தற்போது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது, அரசுத் தரப்பு அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தெரிவித்ததை அடுத்து, அவரது பயண ஆவணத்தை தற்காலிகமாக வெளியிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதோடு, வரும் டிசம்பர் 6ஆம் தேதிக்கு முன் நீதிமன்றத்தில் திரும்ப பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மகள் நூரியானா நஜ்வாவைப் பார்க்க தனது பாஸ்போர்ட்டை வெளியிடக் கோரி ரோஸ்மா நீதிமன்றத்தை நாடினார்!
விளம்பரம்:
0 Comments