loader
998 பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது!

998 பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது!

கோலாலம்பூர், அக்டோபர் 15: பெட்டாலிங், கிள்ளான் /ஷா ஆலம், , கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய 998 பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) மதியம் நிலவரப்படி நீர் விநியோகம் 68% மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிர் சிலாங்கூர் நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி ஓர் அறிக்கை  வழி இதனைத் தெரிவித்தார். உலு சிலாங்கூரில் நீர் வழங்கல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், கோலா சிலாங்கூரில் 99.4% மற்றும் ஷா ஆலமில் 94.2% ஆகவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்டாலிங்கில், இது 89.8%, கோலா லங்காட் (85.7%), கோலாலம்பூர் (38.6%) மற்றும் கிள்ளானில் (16.8%) ஆக உள்ளது.

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News