loader
டத்தோ ஸ்ரீ ஏண்டியின் வேட்புமனு நிராகரிப்பு!

டத்தோ ஸ்ரீ ஏண்டியின் வேட்புமனு நிராகரிப்பு!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர்,  அக்டோபர் - 13

எதிர்வரும் அக்டோபர்  24 ஆம்  திகதி மைக்கியின்  முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  கடந்த வெள்ளிக்கிழமை அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

3 உதவித் தலைவர் பதவிக்கு ஆறு பேர்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.  நஜ்மி, டத்தோ சுப்ரமணியம், கேசவன் , திருநாவுக்கரசு, டத்தோ டாலிஃப் சிங் மற்றும் டத்தோ ஸ்ரீ ஏண்டி  ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அனைவரது வேட்புமனுக்களும் தேர்தல் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

இதில் உதவித் தலைவர் பதவிக்கு கோலாலம்பூர், புத்ரா ஜெயா   வர்த்தக சங்கத்தில்  சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த டத்தோ ஸ்ரீ ஏண்டியின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டது 

தேர்தல் குழு தலைவர் டத்தோ ரமேஷ் இன்று அந்த வேட்பு மனுதாக்கலை நிராகரித்தார்.

டத்தோ ஸ்ரீ ஏண்டி கோலாலம்பூர் புத்ரா ஜெயா வர்த்தக சங்கத்தில் வகித்த பொறுப்பில் இருந்து விலகியதாகவும், அவர் கோலாலம்பூர் புத்ரா ஜெயா வர்த்தக சங்கத்தை பிரதிநிதித்து மைக்கி தேர்தலில் போட்டிய முடியாது என்று கோலாலம்பூர் புத்ரா ஜெயா வர்த்தக சங்கம் தேர்தல் குழுவிற்கு  கடிதம்  அனுப்பியுள்ளதாகவும், அதன் அடிப்படையில்   அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News