loader
நீர் தடை நீங்கியது!

நீர் தடை நீங்கியது!

 

கோலாலம்பூர், அக்டோபர் 11: நேற்று தலை நகரில் ஏற்பட்ட திடீர் நீர்த்தடை, இன்று திங்கள்கிழமை (அக்டோபர் 11) மாலை 3 மணி அளவில் சரியானது.

இதனால், சிகாம்புட் பம்ப் ஹவுஸில் பம்பிங் குழாய் கசிந்ததால் தடைபட்ட தலைநகரைச் சுற்றியுள்ள 50 பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சிலாங்கூர் நீர் வாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் திட்டமிடப்படாத நீர் தடங்கலுக்காக நுகர்வோர் பொறுமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதற்கு  தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளது.

மேலும் புகார்கள் மற்றும் கேள்விகள் உள்ளவர்கள் www.airselangor.com அகப்பக்கத்தை நாடலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News