(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர், அக்டோபர்-6:
மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனமான மைக்கியின் ஆண்டுக் கூட்டம் எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இவ்வாண்டு அவ்வியக்கத்தின் தேர்தல் ஆண்டு என்பதால், பல உயரிய பதவிகளுக்குப் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மைக்கியின் நடப்புத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், நடப்புத் துணைத்தலைவர் டத்தோ ராஜசேகரன் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதே சமயத்தில் சிலாங்கூர் மாநில சம்மேளனத்தின் தலைவர் டத்தோ சண்முகமும் இம்முறை மைக்கி தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகத் தெரியவந்துள்ளது.
நடப்புச் செயலாளர் டத்தோ ஏ.டி குமரராஜா தலைவர் - துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என பேசப்படுகிறது.
எதிர்வரும் அக்டோபர் 8 ஆம் திகதி மைக்கி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது!
0 Comments