மலாக்கா, அக்டோபர் 5: மலாக்கா மாநிலத்தில் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. இனி தேர்தல்தான் வழி என்றும் அம்னோ தரப்பும் சொல்லிவிட்டது.
மலாக்கா மாநில முதல்வர் சுலைமான் முகமட் அலிக்கு எதிராக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி விலகியதை அடுத்து அங்கு ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் அம்மாநில ஆளுனர்வ்துன் முகமட் அலி ருஸ்தாமைச் சந்தித்து ஆலோசனை நடைபெற்றதை அடுத்து அம்மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக மலாக்கா மாநில சட்டமன்ற சபாநாயகர் முகமட் ரவூப் யூசோ தெரிவித்தார். இதனை அடுத்து ஆட்சி கலைக்கப்பட்டது.
0 Comments