loader
ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர்!

ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் அக்டோபர்- 4

ம.இ.காவின் கட்சித் தேர்தல் கட்டம் கட்டமாக அக்டோபர் மாதம் தொடங்கி, நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள நிலையில்,
அக்டோபர் 17 -ஆம் தேதி ம.இ.கா இளைஞர் பகுதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்முறை நடப்பு ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன், இளைஞர் பிரிவின் வயது கட்டுப்பாடு காரணமாக போட்டியிடமாட்டார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.

அந்த வரிசையில் அண்ட் ரூ டேவிட் , ரவீன் குமார் மற்றும் புனிதன் ஆகியோரின் பெயர் அடிபடிகிறது.

இந்த மூன்று பெயர்களும் ம.இ.கா வட்டாரத்தில் மிகவும் பிரபலமான பெயர்கள்தான். அதிலும் புனிதன், டத்தோ டி.மோகன் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த காலத்தில் இருந்த டத்தோ சிவராஜ், இப்போது தினாளன் காலம் வரை இளைஞர் பிரிவில் துடிப்புடன் செயல்பட்டு வரும் ஒருவர். கடந்த முறையே அவருடையே பெயர் இளைஞர் பிரிவுத் தலைவர் பட்டியலில் இருந்தது. இந்த முறை அவர் வேட்பு மனு தாக்கல் செய்வாரா?

அதே நேரத்தில் தினாளன் தலைமைத்துவத்தில் செயலாளராக  தேசிய ம.இ.காவில் துடிப்புடன் செயல்பட்டு வருபவரும், மிகவும் குறுகிய காலகட்டத்தில் ம.இ.கா வட்டாரத்தில் அதிக அளவில் பேசப்படுபவருமான  அண்ட் ரூ டேவிட்,   இந்த முறை தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

அதே சமயம் ஜொகூர் தெங்காரு சட்டமன்ற உறுப்பினர் ரவின் குமார் பெயரும் இம்முறை தேசிய இளைஞர் பிரிவில் பேசப்படுகிறது. ஜொகூர் மாநிலத்தில் வெற்றி பெற்று துடிப்புடன் செயல்பட்டுவரும் இவர், இதற்கு முன் தேசிய புத்ரா தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிட தக்கது.

எது எப்படியாக இருந்தாலும்,  எதிர் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பதிவிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் யார்? அடுத்த  ம.இ.கா தலைமுறையின்  இளைஞர் பகுதி தலைவர் வேட்பாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

0 Comments

leave a reply

Recent News