loader
வெளிநாட்டுப் பயணங்களுக்கு டிசம்பர் முதல் அனுமதி

வெளிநாட்டுப் பயணங்களுக்கு டிசம்பர் முதல் அனுமதி

கோலாலம்பூர், அக் 4: டிசம்பர் மாதம் முதல் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

நேற்று நாளேடுகளின் மூத்த ஆசிரியர்களுடனான நேர்காணலின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டில் வயது வந்தோரில் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட பின்னர், வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றார் பிரதமர்.

ஒருவேளை டிசம்பர் மாதத்துக்கு முன்பே கூட இந்த அனுமதி வழங்கப்படலாம் என்று அவர் கூறினார்.

அடுத்த இரு வாரங்களில் இலக்கை அடைந்துவிட்டால்கூட அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது. அதன் பின்னர் பயணங்களை மேற்கொள்ள MyTravelPass (MTP)க்கு விண்ணப்பிக்க அவசியம் இருக்காது.
எனினும், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நீடிக்கும் என்றார் அவர்.

0 Comments

leave a reply

Recent News