loader
வயது வந்தோரில் இதுவரை 87 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

வயது வந்தோரில் இதுவரை 87 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

கோலாலம்பூர், அக் 4: வயது வந்தோரில் இதுவரை 87 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதாவது, 20,513,168 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.

வயது வந்தோரில் இதுவரை 94.3 விழுக்காட்டினர், அதாவது 22,081,548 பேருக்கு ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் 'கோவிட் நவ்' இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 108,826 அல்லது 3.5 விழுக்காடு பதின்ம வயதினருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

நேற்று ஒரே நாளில் 206,574 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றுள் 96,024 முதல் தவணையாகவும், 110,550 இரண்டாம் தவணையாகவும் செலுத்தப்பட்டன.

இதன் மூலம் நாட்டில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 44,352,079 ஆக அதிகரித்துள்ளது.

0 Comments

leave a reply

Recent News